இரட்டைக் குழந்தைகளை குழி தோண்டி புதைத்த கொடூரம்!

 

இரட்டைக் குழந்தைகளை குழி தோண்டி புதைத்த கொடூரம்!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆதனக்குறிச்சி கிராமத்தில் தனியார் சிமெண்ட் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று காலை வழக்கம் போல பணிக்கு திரும்பிய அப்பகுதி மக்கள், அங்கு இருக்கும் சுரங்கப்பகுதியில் இரட்டை குழந்தைகளின் சடலங்கள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உடனடியாக மண்ணைத் தோண்டி குழந்தைகளின் சடலத்தை வெளியே எடுத்துள்ளனர். அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.

இரட்டைக் குழந்தைகளை குழி தோண்டி புதைத்த கொடூரம்!

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார், குழந்தைகளை அங்கு வீசிச் சென்றது யார் என விசாரணையை மேற்கொண்டனர். ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால் இக்கொடூர சம்பவத்தை செய்தது யார் என தெரியவராத நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் உண்மை வெளிப்படலாம் என கூறப்படுகிறது.

திருமணத்தை மீறிய உறவால் குழந்தைகளை கொலை செய்து இருக்கலாம் என்றும் குழந்தையின் பெற்றோர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.