‘முகத்தில் காயம்’ பச்சிளம் பெண் குழந்தை மர்ம மரணம் : போலீசார் தீவிர விசாரணை!

 

‘முகத்தில் காயம்’ பச்சிளம் பெண் குழந்தை மர்ம மரணம் : போலீசார் தீவிர விசாரணை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வசித்து வந்த தம்பதி சின்னசாமி – சிவப்பிரியங்கா. இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 10ஆம் தேதி மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று முன்தினம் உசிலம்பட்டியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு, இந்த தம்பதி பிறந்த குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

‘முகத்தில் காயம்’ பச்சிளம் பெண் குழந்தை மர்ம மரணம் : போலீசார் தீவிர விசாரணை!

உடனடியாக பெற்றோர்கள் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அப்போது, குழந்தையின் முகத்தில் காயம் இருந்ததை கண்டறிந்த மருத்துவர்கள், குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

‘முகத்தில் காயம்’ பச்சிளம் பெண் குழந்தை மர்ம மரணம் : போலீசார் தீவிர விசாரணை!

அரசு மருத்துவர்கள் புகாரின் பேரில் குழந்தை மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சின்னசாமி மற்றும் பிரியங்காவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் முகத்தில் காயம் இருப்பதால் குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கும் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் உண்மை தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.