“குழந்தையை குளிப்பாட்டறேன்னு இப்படி பண்ணிட்டியே..” -நர்ஸ் வேஷம்போட்ட ஒரு பெண் செய்த மோசடி

 

“குழந்தையை குளிப்பாட்டறேன்னு இப்படி பண்ணிட்டியே..” -நர்ஸ் வேஷம்போட்ட ஒரு பெண் செய்த மோசடி

ஒரு மகப்பேறு மருத்துவமனைக்குள் புகுந்து பிறந்த குழந்தையை கடத்திய ஒரு பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள் .

“குழந்தையை குளிப்பாட்டறேன்னு இப்படி பண்ணிட்டியே..” -நர்ஸ் வேஷம்போட்ட ஒரு பெண் செய்த மோசடி

தெற்கு மிசோரத்தின் லுங்லே நகரில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில்

திபெராகாட் கிராமத்தில் வசிக்கும் சுரோட்டா சக்மா மற்றும் திலோன் சக்மா ஆகிய தம்பதிகளுக்கு  கடந்த வாரம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்து நான்கு நாட்களுக்கு பிறகு கடந்த ஞாயிற்று கிழமையன்று குழந்தை கடத்தல் கூட்டத்தை சேர்ந்த ஒரு பெண் அந்த மருத்துவமனைக்கு வந்தார் .பிறகு அவர் வாடகைக்கு நர்ஸ் உடையை வாங்கி அதை அணிந்து கொண்டார் .பின்னர் நர்ஸ் வேடத்திலிருந்த அந்த பெண் அந்த மருத்துவனையில் புதிதாக பிறந்த அந்த ஆண் குழந்தையை தூக்கி கொண்டு போனார் .அப்போது அந்த குழந்தையின் தாய் ஏன் குழந்தையை  தூக்கி செல்கிறீர்கள்?” என்று கேட்ட போது ,அதற்கு அந்த நர்ஸ் குழந்தையை குளிப்பட்ட தூக்கி செல்கிறேன் என்று கூறினார் .

அதை உண்மையென்று நம்பிய அந்த தாய் அவரிடம் குழந்தையை கொடுத்தார் .அதன் பிறகு அந்த பெண் அந்த குழந்தையை அந்த மருத்துவமனையிலிருந்து கடத்தி சென்று விட்டார் .அதன் பிறகு குழந்தையை குளிப்பாட்ட தூக்கி சென்று பெண் நீண்ட நேரமாகியும் கொண்டு வராததால் பதட்டமடைந்த அந்த குழந்தையின் தாய் தனது குழந்தை கடத்தப்பட்டதாக உணர்ந்தார் .பின்னர் இந்த விஷயத்தை உறவினர்களிடம் கூறினார் .உடனே அனைவரும் சேர்ந்து குழந்தை கடத்தல் பற்றி போலீசில் புகார் கூறினர் .போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமெரா காட்சிகளை  ஆய்வு செய்து ,குழந்தையையும் அதை கடத்திய பெண்ணையும் தேடி வருகிறார்கள்.

“குழந்தையை குளிப்பாட்டறேன்னு இப்படி பண்ணிட்டியே..” -நர்ஸ் வேஷம்போட்ட ஒரு பெண் செய்த மோசடி