தஞ்சை அருகே முட்புதரில் வீசப்பபட்ட பச்சிளங்குழந்தை உயிருடன் மீட்பு!

 

தஞ்சை அருகே முட்புதரில் வீசப்பபட்ட பச்சிளங்குழந்தை உயிருடன் மீட்பு!

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே இருக்கும் வில்லவராயப்பட்டியில் பிறந்து 10 நாட்களே ஆன ஆண்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

வில்லவராயப்பட்டி பகுதியில் பாலம் ஒன்று இருக்கிறது. அந்த பாலத்தின் கீழே இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்ட நிலையில், பொதுமக்கள் பாலத்தின் அடியில் சென்று பார்த்த போது அங்கு ஒரு ஆண்குழந்தை இருந்துள்ளது. உடனே அந்த குழந்தையை மீட்ட பொதுமக்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில், குழந்தையை அங்கு வீசிச் சென்றது யார்? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தஞ்சை அருகே முட்புதரில் வீசப்பபட்ட பச்சிளங்குழந்தை உயிருடன் மீட்பு!

கடலூர் மாவட்டத்திலும் நேற்று ஆண்குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது. பரவலூர் கிராமத்தில் இருக்கும் நல்லூர் சாலை அருகே கருவேலமர தோப்பில், பையில் கிடந்த பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது போன்று, இரக்கமின்றி பச்சிளங்குழந்தைகளை ரோட்டில் வீசிச் செல்லும் அவலம் தொடர்கதையாகி வருகிறது.