பிறந்து 25 நாட்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு உயிரிழப்பு!

 

பிறந்து 25 நாட்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு உயிரிழப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 21 லட்சத்து 98 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 52ஆயிரத்து 791பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் 4,231 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது.

பிறந்து 25 நாட்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு உயிரிழப்பு!

இந்நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு கடந்த மாதம் 27 அம் தேதி எழும்பூரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் 3 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. அதன் முடிவில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த குழந்தையை தாயிடமிருந்து தனிமைப்படுத்திய மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 7-7-2020 அன்று மாலை உயிரிழந்தது. அந்த குழந்தைக்கு செப்டிசீமியா, ஹிர்ஷ்ஸ்ப்ரங் பல லாபரோடோமிகள் நோய்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.