வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி :கனமழை எச்சரிக்கை!

 

வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி :கனமழை எச்சரிக்கை!

வெப்பசலனம் காரணமாக சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ,திருப்பத்தூர் ,வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் எனவும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி :கனமழை எச்சரிக்கை!

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி :கனமழை எச்சரிக்கை!

இந்நிலையில் வடக்கு அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மே 24 வலுப்பெற்று மே 26 கரையை கடக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது. கேரளா , கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.