நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதிய “ஆவின் மோர்” : புதிதாக 5 பொருட்கள் அறிமுகம்!

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதிய “ஆவின் மோர்” : புதிதாக 5 பொருட்கள் அறிமுகம்!

தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தில் பால், நெய், பால்கோவா உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கின்றன.

aavin

இந்நிலையில் ஆவினில் தற்போது புதிதாக 5 பொருட்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதில் மோர், லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, ஆவின் டீ மேட் பால் , சமன்படுத்தப்பட்ட பால் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதிய “ஆவின் மோர்” : புதிதாக 5 பொருட்கள் அறிமுகம்!

இதில் குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதிய “ஆவின் மோர்” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை அடங்கிய பொருட்களை சேர்த்து புதிய ஆவின் மோர் அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.