தமிழுக்கு பெருமை சேர்ப்போருக்கு புதிய விருது… ரூ.10 லட்சம் பரிசு என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

 

தமிழுக்கு பெருமை சேர்ப்போருக்கு புதிய விருது… ரூ.10 லட்சம் பரிசு என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழின வளர்ச்சிக்கு பங்காற்றியோரைச் சிறப்பிக்கும் பொருட்டு புதிய விருது ஒன்றை அறிமுகப்படுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் மகத்தான, “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது உருவாக்கப்படவுள்ளது.

தமிழுக்கு பெருமை சேர்ப்போருக்கு புதிய விருது… ரூ.10 லட்சம் பரிசு என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

இவ்விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு முதலமைச்சர் தலைமையில், தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் அறிவுறுத்தியிருக்கிறார்.

தமிழுக்கு பெருமை சேர்ப்போருக்கு புதிய விருது… ரூ.10 லட்சம் பரிசு என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் ”தகைசால் தமிழர்” விருது பெறும் விருதாளருக்குப் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திர தின விழாவின்போது, முதலமைச்சர் கையால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.