சொத்துக்காக மாமனாரை கொலை செய்த மருமகன்: வில்லிவாக்கத்தில் பயங்கரம்!

 

சொத்துக்காக மாமனாரை கொலை செய்த மருமகன்: வில்லிவாக்கத்தில் பயங்கரம்!

சென்னை அருகே சொத்து பிரச்னையில் மருமகன் மாமனாரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வில்லிவாக்கம் சிட்கோ நகர் 46ஆவது தெருவில் வசித்து வந்த தம்பதி குமார்(52) – பிரேமலதா(48). இவர்கள் இருவரும் பிரேமலதாவின் தந்தை ஜெகநாதன்(82) மற்றும் அவரது மனைவியுடன் கூட்டுக் குடும்பமாக இருந்து வந்துள்ளனர். பிரேமலதா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதால், வேலைக்கு செல்லாத குமார் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து வந்திருக்கிறார்.

சொத்துக்காக மாமனாரை கொலை செய்த மருமகன்: வில்லிவாக்கத்தில் பயங்கரம்!

பிரேமலதாவின் தந்தை ஜெகன்நாதனுக்கு, வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே பூர்வீகமான வீடு ஒன்று இருக்கிறதாம். அதனை தன் பெயருக்கு மாற்றச் சொல்லி அடிக்கடி குமார் ஜெகநாதனை வற்புறுத்தி வந்துள்ளார். இதனை ஜெகநாதன் ஏற்க மறுத்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்து கொண்டே இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் குமார் ஜெகநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிறிது நேரத்தில் அது கைகலப்பாக மாறியுள்ளது.

சொத்துக்காக மாமனாரை கொலை செய்த மருமகன்: வில்லிவாக்கத்தில் பயங்கரம்!

ஆத்திரமடைந்த குமார் ஜெகநாதனை, சமையல் அறையில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். படுகாயம் அடைந்த ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், ஜெகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், குமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.