சொத்து தகராறில் தந்தை வெட்டிக்கொலை – மகன்கள் வெறிச்செயல்

 

சொத்து தகராறில் தந்தை வெட்டிக்கொலை – மகன்கள் வெறிச்செயல்

நெல்லை

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே சொத்துத் தகராறில் தந்தையை வெட்டிகொன்று விட்டு, மகன்கள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி அழகிய நம்பிபுரத்தை சேர்ந்தவர் காமராஜ் (65). அதே பகுதியில் பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வரும் இவருக்கு, மல்லிகா என்ற மனைவியும், 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில், அவர்கள் தனித்தனியே வசித்து வந்துள்ளனர்.

சொத்து தகராறில் தந்தை வெட்டிக்கொலை – மகன்கள் வெறிச்செயல்

இந்நிலையில், காமராஜ் தனக்கு சொந்தமான இரண்டே கால் சென்ட் காலிமனையை, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூத்த மகன் கென்னடி என்பவருக்கு எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது இளைய மகன்கள் ராஜா மற்றும் சேகர் ஆகியோர், காமராஜிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இருவரும் மது அருந்திவிட்டு, காமராஜின் கடைக்கு சென்று மீண்டும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மோதல் முற்றவே, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காமராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் காமராஜ் சம்பவ இடத்திலேயே

சொத்து தகராறில் தந்தை வெட்டிக்கொலை – மகன்கள் வெறிச்செயல்

உயிரிழந்தார். பின்னர் கென்னடியின் வீட்டிற்கு சென்ற இருவரும், அவரையும் கொலை செய்ய முயன்றனர். இதில் லேசான காயங்களுடன் தப்பியோடிய அவர், போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, காமராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பணகுடி போலீசார், தந்தையை வெட்டிக்கொன்று விட்டு தப்பியோடிய மகன்களை தேடி வருகின்றனர்.