நெல்லை விரைவு ரயில்கள் இனி மதுரையுடன் ரத்து! பயணிகள் அதிர்ச்சி

 

நெல்லை விரைவு ரயில்கள் இனி  மதுரையுடன் ரத்து! பயணிகள் அதிர்ச்சி

இரட்டை அகல ரயில் பாதை பணிகள் காரணமாக வரும் நாட்களில் கீழ்காணும் ரயில்கள் முழுவதுமாக/ பகுதி ரத்து மற்றும் பாதை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “* 02627/8 திருச்சிராப்பள்ளி- திருவனந்தபுரம்- திருச்சிராப்பள்ளி விரைவு வண்டி 19.02.2021 முதல் 28.02.2021 வரை முழுவதுமாக ரத்து

*06127 சென்னை எழும்பூர்- குருவாயூர் விரைவு வண்டி மதுரையில் இருந்து தென்காசி வழியாக திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும். 24.02.2021, 25.02.2021, 26.02.2021 மற்றும் 28.02.2021 ஆகிய நாட்களில் மாற்று பாதையில் செல்லும். இதனால் சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிறுத்தங்கள் வழியாக செல்லாது.

நெல்லை விரைவு ரயில்கள் இனி  மதுரையுடன் ரத்து! பயணிகள் அதிர்ச்சி

*02631/2 சென்னை எழும்பூர்- திருநெல்வேலி- சென்னை எழும்பூர் விரைவு வண்டி 24.02.2021 முதல் 28.02.2021 வரை மதுரை வரை மட்டுமே செல்லும்/ புறப்படும்.

*06321/2 நாகர்கோவில்- கோயம்புத்தூர்- நாகர்கோவில் விரைவு வண்டி 24.02.2021 முதல் 28.02.2021 வரை மதுரை வரை மட்டுமே செல்லும்/ புறப்படும்.

  • 07235/6 நாகர்கோவில்- பெங்களூரு- நாகர்கோவில் விரைவு வண்டி 24.02.2021 முதல் 28.02.2021 வரை விருதுநகர் வரை மட்டுமே செல்லும்/ புறப்படும்.
  • 02667/8 நாகர்கோவில்- கோயம்புத்தூர்- நாகர்கோவில் விரைவு வண்டி 25.02.2021 முதல் 28.02.2021 வரை மதுரை வரை மட்டுமே செல்லும்/ புறப்படும்.
  • 06235/6 தூத்துக்குடி- பெங்களூரு- தூத்துக்குடி விரைவு வண்டி 28.02.2021அன்று ஒருநாள் மட்டும் மதுரை வரை மட்டுமே செல்லும்/ புறப்படும்.
  • 06071 மும்பை தாதர்- திருநெல்வேலி விரைவு வண்டி 28.02.2021அன்று ஒருநாள் மட்டும் விருதுநகர் வரை மட்டுமே செல்லும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.