நெல்லை அதகளம் – அதிர்ச்சியில் அறிவாலயம்

 

நெல்லை அதகளம் – அதிர்ச்சியில் அறிவாலயம்

திமுக முதன்மை செயலாளர் நேரு முன்பாக அந்த கட்சியின் நெல்லை நிர்வாகிகள் நடத்திய அதகளம் அறிவாலய வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.’ தேர்தல் நெருங்குவதற்குள் இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ!’ என பதறுகிறார்கள் அறிவாலய நிர்வாகிகள்.

நெல்லை அதகளம் – அதிர்ச்சியில் அறிவாலயம்

திமுகவில் மாவட்டங்களைத் தொடர்ந்து இப்போது ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பதவியில் இருக்கும் ஒன்றியச் செயலாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, புதியவர்கள் ஆதரவு அளிக்க ஒவ்வொரு இடத்திலும் முட்டல், மோதல் நடைபெற்று வருகிறது. இப்படி மோதல் நடக்கும் இடங்களைச் சேர்ந்தவர்களை சென்னைக்கு அழைத்து பஞ்சாயத்து செய்யும் பொறுப்பு நேருவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் நெல்லை கிழக்கு மாவட்டம் வள்ளியூர் ஒன்றியத்தை பிரிப்பது தொடர்பான பஞ்சாயத்து நேரு முன்னிலையில் நடைபெற்றது. தற்போதைய நெல்லை எம்.பியான ஞானதிரவியம்தான் வள்ளியூர் ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார். இவருக்குப் போட்டியாக வர்த்தக அணி துணைத் தலைவர் கிரகாம்பெல் காய்நகர்த்தி வருகிறார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனும், ஞானதிரவியமும் வேண்டா வெறுப்பாக நட்பு பாராட்டி வருகின்றனர்.

நெல்லை அதகளம் – அதிர்ச்சியில் அறிவாலயம்


ஒன்றியத்தை பிரிக்க நீண்ட தயக்கத்திற்கு பிறகு ஒப்புக்கொண்ட ஞானதிரவியம், புதிய ஒன்றியத்திற்கு தான் சொல்லும் ஆளையே செயலாளராக நியமிக்க வேண்டுமென நேருவிடம் சொல்ல, இதற்கு கிரகாம்பெல் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தனது ஆளையே நியமிக்க வேண்டுமென அவரும் மல்லுக்கட்ட, ஞானதிரவியத்திற்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு பேசியிருக்கிறார். கொஞ்ச நிமிடங்களில் அறிவாலயமே அதிர்ந்து போகுமளவிற்கு வார்த்தை யுத்தம் வெடித்திருக்கிறது. ’’ ஏலே உன்னைத் தெரியாதா?’’ என்பதில் தொடங்கி நெல்லை தமிழில் கெட்ட வார்த்தைகளை இரு தரப்பும் சகட்டுமேனிக்கு பயன்படுத்த நேரு செம டென்ஷனாகிவிட்டாராம். கடைசியில் அவர் தனது வழக்கமான பாணியில் ஓங்கி சத்தமிட அதன் பிறகே அமைதி திரும்பியிருக்கிறது. கொஞ்ச நேரம் உள் அறைக்கு சென்ற நேரு, இந்த நெல்லை குஸ்தி பற்றி ஸ்டாலினிடம் போனில் பற்றவைத்திருக்கிறார்.

நெல்லை அதகளம் – அதிர்ச்சியில் அறிவாலயம்


கடைசியில் வள்ளியூர் ஒன்றியம் வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு ஒன்றிற்கு ஞானதிரவியமே செயலாளராகத் தொடர்கிறார். புதிய ஒன்றியத்திற்கு கிரகாம்பெல் சொன்ன ஆளை போடாமல் அவரது பெயரையே மா.செ ஆவுடையப்பன் பரிந்துரை செய்திருக்கிறார். இதென்ன புது கலாட்டா? என கேள்வியெழுப்பினால் ‘’ இது பெல்லை உள்ளூரிலேயே முடக்கிவைப்பதற்கான ஏற்பாடு’’ என கண் சிமிட்டுகிறார்கள் மா.செ ஆட்கள்