நெல்லை நீதிபதி நீஷ் கொரோனா தொற்றுக்கு பலி!

 

நெல்லை நீதிபதி நீஷ் கொரோனா தொற்றுக்கு பலி!

நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி நீஷ் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

நெல்லை நீதிபதி நீஷ் கொரோனா தொற்றுக்கு பலி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்தும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 33,181பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸின் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15லட்சத்து 98ஆயிரத்து 216ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,670ஆக அதிகரித்துள்ளது.

நெல்லை நீதிபதி நீஷ் கொரோனா தொற்றுக்கு பலி!

இந்நிலையில் நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி நீஷ் கொரோனா தொற்றுக்கு பலியானார். கடந்த 10நாட்களுக்கு முன்பு நெல்லை தலைமை குற்றவியல் நீதிபதியாக பதவி ஏற்ற இவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.