நெல்லையில் மேலும் 93 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 2,439 ஆக உயர்வு!

 

நெல்லையில் மேலும் 93 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 2,439 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,538பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 79 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,315ஆக அதிகரித்துள்ளது.

நெல்லையில் மேலும் 93 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 2,439 ஆக உயர்வு!

இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 83,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நெல்லையில் மேலும் 93 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 2,439 ஆக உயர்வு!

இந்நிலையில்  நெல்லையில் மேலும் 93 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,439 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,169 ஆக உயர்ந்துள்ளது.