நெல்லையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 5,560 ஆக அதிகரிப்பு!

 

நெல்லையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 5,560 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,879 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது.

நெல்லையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 5,560 ஆக அதிகரிப்பு!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 877 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

நெல்லையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 5,560 ஆக அதிகரிப்பு!

இந்நிலையில் நெல்லையில் மேலும் 167 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,560 ஆக அதிகரித்துள்ளது.