நெல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்.. 1500 பேர் பாதிப்பு!

 

நெல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்.. 1500 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 4,231 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகி வருவதால், அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் படுக்கை வசதிகள், கூடுதல் உபகரணங்கள், சிறப்பு மருத்துவமனை முகாம்கள் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அதிவேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்.. 1500 பேர் பாதிப்பு!

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மக்கள் வெவ்வேறு மாவட்டங்களுக்குப் புலம் பெயர ஆரம்பித்த நிலையில், மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு பன்மடங்காக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுரை, தேனி, கடலூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக நெல்லை மாநகர பகுதியில் மட்டுமே 52 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.