நெல்லையில் மேலும் 343 பேருக்கு கொரோனா உறுதி; விழுப்புரத்திலும் அதிகரிக்கும் பாதிப்பு!

 

நெல்லையில் மேலும் 343 பேருக்கு கொரோனா உறுதி; விழுப்புரத்திலும் அதிகரிக்கும் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,993பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

நெல்லையில் மேலும் 343 பேருக்கு கொரோனா உறுதி; விழுப்புரத்திலும் அதிகரிக்கும் பாதிப்பு!

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 95,857 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நெல்லை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. விழுப்புரத்தில் மேலும் 99 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 3,369 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நெல்லையில் 343 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு 4,306 ஆக உயர்ந்துள்ளது.