நெல்லையில் மின்சாரம் பாய்ந்து அண்ணன் – தம்பி உயிரிழப்பு!

 

நெல்லையில் மின்சாரம் பாய்ந்து அண்ணன் – தம்பி உயிரிழப்பு!

நெல்லை

நெல்லையில் தள்ளுவண்டியை சுத்தம்செய்தபோது மின்சாரம் பாய்ந்து அண்ணன், தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் மேலக்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் மகாராஜான். இவரது மகன்கள் கிட்டு (28) மற்றும் அருண் (27). கிட்டுவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சகோதரர்கள் இருவரும், மேலபாளையம் விஜயா கார்டன் பகுதியில் தள்ளு வண்டியில் துரித உணவகம் நடத்தி வந்தனர்.

நெல்லையில் மின்சாரம் பாய்ந்து அண்ணன் – தம்பி உயிரிழப்பு!

இதற்காக தள்ளு வண்டிக்கு, அருகில் இருந்த டீக்கடையில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்து சகோதரர்கள் இருவரும் தள்ளுவண்டியை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடையில் இருந்து வந்த மின்சார ஒயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு, தள்ளுவண்டியில் மின்சாரம் பாய்ந்தது.

இதில் கிட்டு மற்றும் அருண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய மேலபாளையம் போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.