நெய்வேலியில் தோட்டத்தில் சடலமாக கிடந்த இளைஞர்… போலீசார் விசாரணை…

 

நெய்வேலியில் தோட்டத்தில் சடலமாக கிடந்த இளைஞர்… போலீசார் விசாரணை…

கடலூர்

நெய்வேலி அருகே இளைஞர் மர்மநபர்களால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 14 பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் நேற்று காலை இளைஞர் ஒருவர் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இது குறித்து, அந்த பகுதி மக்கள், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில், நெய்வேலி டிஎஸ்பி கங்காதரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நெய்வேலியில் தோட்டத்தில் சடலமாக கிடந்த இளைஞர்… போலீசார் விசாரணை…

மேலும், கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் உயிரிழந்த நபர் நெய்வேலி வட்டம் 21-ஐ சேர்ந்த சிவக்குமார் என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

எனவே முன்விரோதம் காரணமாக யாரேனும் சிவகுமாரை அடித்துக் கொன்றனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.