“விளையாட்டை பார்த்து ,வீட்டிற்குள் புகுந்து ..” -பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாநில பூப்பந்து வீராங்கனை

 

“விளையாட்டை பார்த்து  ,வீட்டிற்குள் புகுந்து ..”  -பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாநில பூப்பந்து வீராங்கனை

ஒரு ஸ்டேட் லெவல் பூப்பந்து வீராங்கனையை வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் வளைத்து பிடித்தார்கள் .

“விளையாட்டை பார்த்து  ,வீட்டிற்குள் புகுந்து ..”  -பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாநில பூப்பந்து வீராங்கனை


உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவிற்கு அருகே கோசி என்ற ஊரில் பிரபலமான மாநில அளவில் விளையாடும் பூப்பந்து விளையாட்டு வீராங்கனை ஒருவர் தினமும் அதிகாலையில் அவரின் வீட்டு வாசலில் நெட் கட்டி பூப்பந்து விளையாடுவார் .அவர் உத்தரப்பிரேதேச அணிக்காக மாநில அளவில் விளையாடி பல பதக்கங்களை வாங்கியுள்ளார் .அப்போது அவரின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் வினோத் என்ற வாலிபர் அந்த பூபந்து வீராங்கனை பெண்ணை நோட்டமிட்டு வந்துள்ளார் .அவரின் ஆடைகளையும் , அசைவுகளையும் கண்ட அவருக்கு அவர் மீது ஆசை வந்துள்ளது .
இதனால் கடந்த செவ்வாய் கிழமையன்று காலையில் அந்த பெண்ணின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .அப்போது அந்த பெண் கத்தி கூச்சலிடவே வெளியே இருந்த அவரின் தம்பி ஓடிவந்து அந்த வாலிபரிடமிருந்து தன்னுடைய சகோதரியை காப்பாற்றினார் .பிறகு வினோத்தின் உறவினர்களும் அங்கு கூடிவிடவே அப்போது அவர்கள் அந்த பெண்ணை கேவலமாக பேசி கிண்டல் செய்து விட்டு ,வினோத்தை அங்கிருந்து அவரின் உறவினர்கள் அழைத்து சென்று விட்டனர்
பிறகு அந்த பூப்பந்து வீராங்கனை இந்த சம்பவம் தொடர்பாக அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து இந்த சம்பவம் தொடர்பாக எட்டு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர் .

“விளையாட்டை பார்த்து  ,வீட்டிற்குள் புகுந்து ..”  -பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாநில பூப்பந்து வீராங்கனை