“VPF பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்” – அமைச்சர் கடம்பூர் ராஜு

 

“VPF பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்” – அமைச்சர் கடம்பூர் ராஜு

முதல்வரின் அனுமதியுடன் “VPF பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

“VPF பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்” – அமைச்சர் கடம்பூர் ராஜு

VPF கட்டணம் தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்னை நிலவி வருகிறது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், இதற்கு தீர்வு எட்டப்படவில்லை. அதனால் வரும் தீபாவளிக்கு புதிய படங்கள் ஏதும் வெளியாகாது என தயாரிப்பாளர் சங்க தலைவர் இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். பல மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

“VPF பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்” – அமைச்சர் கடம்பூர் ராஜு

இந்த நிலையில், VPF பிரச்சனை குறித்து இரு தரப்பினரிடையே அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். முதல்வரின் அனுமதி பெற்று திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை அழைத்து பேச முடிவெடுத்திருப்பதாகவும் இரு தரப்பினர் இடையே சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தினால் அது மகிழ்ச்சியே என்றும் அவர் கூறினார்.