நீட் – ஆன்லைன் கல்வி: இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்? – மத்திய – மாநில அரசுகளுக்கு கனிமொழி கேள்வி

 

நீட் – ஆன்லைன் கல்வி: இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்? – மத்திய – மாநில அரசுகளுக்கு கனிமொழி கேள்வி

நீட் மற்றும் ஆன்லைன் கல்வி காரணமாக இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம் என்று மத்திய – மாநில அரசுகளுக்கு தி.மு.க எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.


மதுரையில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவி ஜோதிஶ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கனிமொழி இரங்கல் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். அதில், “நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல. மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும்

நீட் – ஆன்லைன் கல்வி: இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்? – மத்திய – மாநில அரசுகளுக்கு கனிமொழி கேள்வி

கொலைகளே. காவல்துறை அதிகாரி முருகசுந்தரத்தின் மகள் ஜோதி துர்கா, நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவர்கள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது.
கடந்த வாரம், தேனியைச் சேர்ந்த விக்கிரபாண்டி, உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த நித்யஶ்ரீ ஆகியோர் ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதே வாரத்தில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்? ” என்று கூறியுள்ளார்.


அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், “நீட்

நீட் – ஆன்லைன் கல்வி: இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்? – மத்திய – மாநில அரசுகளுக்கு கனிமொழி கேள்வி

தேர்வு அச்சம் இன்னோர் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நெஞ்சம் விம்முகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த துயரம் தொடருமோ?” என்று கூறியுள்ளார்.