நீட் தேர்வு : திமுக எம்.பி.க்கள் நாளை போராட்டம்!

 

நீட் தேர்வு : திமுக எம்.பி.க்கள் நாளை போராட்டம்!

நீட் தேர்வு பிரச்னை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளனர்.

நீட் தேர்வு : திமுக எம்.பி.க்கள் நாளை போராட்டம்!

நீட் தேர்வினால் அச்சமடைந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. நேற்று ஒரு நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தாலும், மன உளைச்சலாலும் தற்கொலை செய்து கொண்டனர். ஆனாலும் பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கையை நிராகரித்துள்ள மத்திய அரசு, இன்று நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்தியுள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் 238 மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

நீட் தேர்வு : திமுக எம்.பி.க்கள் நாளை போராட்டம்!

இந்நிலையில் நீட் தேர்வு பிரச்னை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நாளை போராட்டம் நடத்தியுள்ளதாக அக்கட்சியின் பொருளாளரும், எம்பியுமான டி. ஆர். பாலு தெரிவித்துள்ளார். மேலும் நீட் தொடர்பாக போராட்டம் நடத்த கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.