“பிணத்துல வாழுற புழுவ விட மோசமானவர் நீங்க” – அமைச்சர் மாஃபாவை கிழித்து தொங்கவிட்ட அனிதாவின் சகோதரர்!

 

“பிணத்துல வாழுற புழுவ விட மோசமானவர் நீங்க” – அமைச்சர் மாஃபாவை கிழித்து தொங்கவிட்ட அனிதாவின் சகோதரர்!

பிரச்சாரம் மேற்கொள்ள இன்றே கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகள் பல்வேறு வழிகளில் பிரச்சாரம் செய்துவருகின்றன. சமூக வலைதளங்களில் அதிகமாகவே பயன்படுத்துகின்றனர். இச்சூழலில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா பேசுவது போல அதிமுகவுக்கு ஆதரவாக டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

“பிணத்துல வாழுற புழுவ விட மோசமானவர் நீங்க” – அமைச்சர் மாஃபாவை கிழித்து தொங்கவிட்ட அனிதாவின் சகோதரர்!

அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு திமுகவால் தான் கொண்டுவரப்பட்டது உள்ளிட்ட பல பொய் பிரச்சாரங்களால் அதில் இடம்பெற்றிருந்தன. இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பாண்டியராஜனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டுள்ளன. அனிதாவின் சகோதரர் மணிரத்னம் ஒருபடி மேலே போய் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார்.

“பிணத்துல வாழுற புழுவ விட மோசமானவர் நீங்க” – அமைச்சர் மாஃபாவை கிழித்து தொங்கவிட்ட அனிதாவின் சகோதரர்!

அதேபோல அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பேசிய ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ” அமைச்சர் பாண்டியராஜன் அவர்களே தங்கை அனிதா நீட் தேர்வையும் அதிமுகவையும் ஆதரிப்பது போல ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறீர்கள். இது எவ்வளவு கேவலமான வேலை தெரியுமா? உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து, லட்சியம் நிறைவேறாம அவங்க இறந்திருந்தா இந்த மாதிரி பண்ணுவீங்ளா.

நீங்க பண்ணுவீங்க. ஏன்னா ஆர்எஸ்எஸ் சனாதானத்திடம் பயிற்சி பெற்றவர் தான நீங்க. நீங்க உங்க கட்சி தலைவர் ஜெயலலிதாவோட பிணத்த உருவமா செஞ்சி ஓட்டு கேட்ட அரசியல்வாதி தான நீங்க. உங்களலாம் என்ன சொல்றதுனே தெரில்ல. பிணத்த உண்டு வாழுற புழுவ விட மோசமானவர்னு நிரூபிச்சிருக்கீங்க” என்று பேசியுள்ளார்.