பழ.நெடுமாறன் டிஸ்சார்ஜ்! தா.பாண்டியன் அட்மிட்….

 

பழ.நெடுமாறன் டிஸ்சார்ஜ்! தா.பாண்டியன் அட்மிட்….

தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பழ. நெடுமாறன் கடந்த 12ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இருப்பினும் ஒரு மாத காலம் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர், மேலும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவு ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து மார்ச் 31-ஆம் தேதி வரை பழ. நெடுமாறன் பங்கேற்கவிருந்த கட்சி தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழ.நெடுமாறன் டிஸ்சார்ஜ்! தா.பாண்டியன் அட்மிட்….

இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக தா.பாண்டியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்