‘ஒரேநாளில் 839 பேர் பலி’ எகிறும் கொரோனா : திணறும் இந்தியா!

 

‘ஒரேநாளில் 839 பேர் பலி’  எகிறும் கொரோனா : திணறும் இந்தியா!

இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது.

‘ஒரேநாளில் 839 பேர் பலி’  எகிறும் கொரோனா : திணறும் இந்தியா!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் மத்திய , மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் மேலும் 1,52,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒரேநாளில் 839 பேர் உயிரிழந்துள்ளனர். எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியதால் மத்திய, மாநில அரசுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அத்துடன் இதுவரை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,69,275 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 1,33,58,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1,20,81,443 பேர் குணமடைந்துள்ளனர்.

‘ஒரேநாளில் 839 பேர் பலி’  எகிறும் கொரோனா : திணறும் இந்தியா!

இதுவரை 25.66 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
நேற்று ஒரே நாளில் 14,12,047 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.