விக்னேஷ் உடன் ஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நயன்தாரா!

 

விக்னேஷ் உடன் ஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நயன்தாரா!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது.

விக்னேஷ் உடன் ஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நயன்தாரா!

இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது காதலியான நடிகை நயன்தாரா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.