மருமகளை கொடுமைப்படுத்துவது காலம் காலமாக நடக்கும் பழக்கம் ! கணவர் சித்திக் குடும்பத்தினர் மீது ஆலியா பரபரப்பு புகார் !

 

மருமகளை கொடுமைப்படுத்துவது காலம் காலமாக நடக்கும் பழக்கம் ! கணவர் சித்திக் குடும்பத்தினர் மீது ஆலியா பரபரப்பு புகார் !

நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா திருமணமாகி 10 வருடங்கள் ஆன நிலையில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். சமீபத்திய பேட்டியில் தன்னுடைய விவகாரத்திற்கான காரணம் நவாஸின் குடும்பத்தினர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் குற்றம் சாட்டியதாக தெரிவித்தார்.

நடிகர் நவாசுதீன் சித்திக் மற்றும் அவரது மனைவி ஆலியா சித்திக் ஆகியோர் கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளில் உள்ளனர். நவாஸிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக ஆலியா அறிவித்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து ஆலியா கூறுகையில் நடிகரின் குடும்பத்தினர் தன்னை ‘மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை’ செய்ததாக நவாஸின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

மருமகளை கொடுமைப்படுத்துவது காலம் காலமாக நடக்கும் பழக்கம் ! கணவர் சித்திக் குடும்பத்தினர் மீது ஆலியா பரபரப்பு புகார் !

நவாஸ் தன்னை ஒருபோதும் தாக்கவில்லை என்று ஆலியா குறிப்பிட்டுள்ள நிலையில், அவரது சகோதரர் தன்னை தாக்க கையை உயர்த்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழ்வுகளை நினைவு கூர்ந்த ஆலியா, நவாஸின் முதல் மனைவியும் இதே போன்ற காரணங்களுக்காக அவரை விட்டு வெளியேறினார் என்றும் இது அவரது குடும்பத்தில் வழக்கமான ஒன்று என்றும் கூறினார். நவாஸ் எப்போதுமே தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற உணர்வை ஏற்படுத்தியதாகவும், மக்கள் முன் பேசுவதை அவர் விரும்பவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
நாள்தோறும் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளதாக குறிப்பிடும் ஆலியா, கணவர் குடும்பத்தார் மீது ஏழு வழக்குகள் உள்ளன. மேலும் நான்கு விவாகரத்துக்கள் நடந்துள்ளன. இது ஐந்தாவது ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார்.