இன்சுலினை சுரக்க வைத்து ,சர்க்கரை நோயாளி என்பதையே மறக்க வைக்கும் இந்த காய்.

 

இன்சுலினை சுரக்க வைத்து ,சர்க்கரை நோயாளி என்பதையே மறக்க வைக்கும் இந்த காய்.

பேரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து, ஃபிளவனோல்கள் (flavanols) மற்றும் ஆன்டிசிட்கள் (anthicids) என அனைத்தும் இணைந்து நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

இன்சுலினை சுரக்க வைத்து ,சர்க்கரை நோயாளி என்பதையே மறக்க வைக்கும் இந்த காய்.

இந்த மூன்று சத்துக்களும் கூட்டணி வைத்துக் கொண்டால், டைப் 2 நீரிழிவு நோய் ஓடிப்போகும். அதற்கு காரணம் இந்த சத்துக் கூட்டணி இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும். இதனால், உடலுக்கு தேவையான இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் எளிதில் சுரக்கும்   .

பேரிக்காயில் வைட்டமின் சி, தாமிரம் மற்றும் பிற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் நோயெதிர்ப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட உதவுகின்றன, அதேபோல, நோய்வாய்ப்பட்டவர்கள் பேரிக்காயை தொடர்ந்து உண்டு வந்தால், விரைவில் குணமடையலாம்.

தினசரி நமக்கு தேவையான 20% நார்ச்சத்துக்கள்  ஒரு பேரிக்காயில் உள்ளன. செரிமான அமைப்புக்கு நார்ச்சத்து மிகவும் உதவும். பேரிக்காயை தொடர்ந்து உண்டு வருவதால், ஆரோக்கியமான குடல் பாக்டீரியா மேம்படும்.

இதயம் மற்றும் ரத்த நாளங்களுக்கு பேரிக்காய் சிறந்தது. இந்தப் பழத்தில் உள்ள நார்ச்சத்து கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். இது நமது குடலை உள்ளே இருந்து சுத்தம் செய்கிறது. அதுமட்டுமல்ல, பேரிக்காய் சிறந்த மலமிளக்கி என்பதால், இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால், மலச்சிக்கல் என்ற சிக்கலே எழாது.

சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவோம். பளிச்சென்ற சருமத்திற்கு உத்தரவாதம் கொடுக்கிறது பேரிக்காய். சருமங்களில் ஏற்படும் சுருக்கத்தை பெருக்கவிடாமல் பாதுகாக்கும் பேரிக்காயில்  வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் காப்பர் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

இவை அனைத்தும் சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன. தோல் மென்மையாகவும், பிரகாசமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டுமானால் பேரிக்காயை தொடர்ந்து சாப்பிடுங்கள்.

மேலும் பேரிக்காயில் தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மேங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பி காம்பளக்ஸ் வைட்டமின், போலேட், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 6 பேன்றவை ஆகியவை அடங்கியுள்ளன.

இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். கர்ப்பிணிப் பெண்கள் பேரிக்காய் சாப்பிட்டால் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு நன்மை ஏற்படும். கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.தாய்ப்பால் சுரக்கும் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலே சிறந்த ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சேர்ந்தது. பேரிக்காயில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்து ஆகியவை உள்ளது. பேரிக்காய் ஜூஸ் செய்தும் சாப்பிடலாம்.

பேரிக்காய் நம்ம உடலில் உள்ள கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைப்பதற்கு உதவும்.

சிறுநீரை வெளியேற்றி, சிறுநீரக செயல்பாட்டை சரி செய்யும். மேலும் சிறுநீரகத்தில் உருவாகும் கற்களையும் இது சரி செய்யும்.