இதை ஆண்கள் தப்பாம சாப்பிட்டா, அடுத்த வருஷமே அப்பா ஆயிடலாம்.

 

இதை ஆண்கள் தப்பாம சாப்பிட்டா, அடுத்த வருஷமே அப்பா ஆயிடலாம்.

நெருஞ்சி உடலுக்கு   குளிர்ச்சியை உண்டாக்கி ,சிறந்த ஆண்மைப்பெருக்கியாக செயல்படுகிறது ,. நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது.உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை  நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது. மேலும்  நெருஞ்சில் மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல். இவைகளை தரும் . . நம்மிடையே இயற்கையில் இருக்கும் ஆண்மை பெருக்கி மருந்துகள் பல இன்னும் சரிவர பயன்படுத்தாமல் இருக்கிறது .நெருஞ்சில் வித்தினை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை பாலில் வரத் தாது கட்டும்.

இதை ஆண்கள் தப்பாம சாப்பிட்டா, அடுத்த வருஷமே அப்பா ஆயிடலாம்.

ஆண்மலட்டுத்தன்மை இருந்தால் நெருஞ்சில் இலையை வெள்ளாட்டு பாலுடன் காய்ச்சி வடிகட்டி இனிப்புக்கு தேன் சேர்த்து குடித்துவந்தால் ஆண்மை அதிகரிக்கும். பலப்படும். நெருஞ்சியுடன் கொத்துமல்லி விதை சம அளவு எடுத்து இடித்து கஷாயமாக்கி தினமும் இரண்டு வேளை குடித்துவந்தால் ப்ராஸ்டேட் வீக்கப் பிரச்சனை நீங்கும்.

நெருஞ்சி இலையை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்தாலே தண்ணீர் அடர்த்தி மிகுந்து கெட்டியாக எண்ணெய் போல் பிசுபிசுப்பாக இருக்கும். இதை ஒரு டீஸ்பூன் அளவு அப்படியே சாப்பிடலாம். இது காமவர்த்தினியாகவே செயல்படும். குழந்தைப்பேறை ஊக்குவிக்க ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது.

நெருஞ்சில் செடியை  வேருடன் பிடுங்கி, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம்.இதில்  50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.