யோகி பாபு முடியை பார்த்து ஏங்குறவங்களுக்கு ,முடி வளர செய்யும் மூன்று பொருட்கள்

 

யோகி பாபு முடியை பார்த்து ஏங்குறவங்களுக்கு ,முடி வளர செய்யும் மூன்று பொருட்கள்

உங்களுக்கு தலை முடி கொட்டாமல் , அடர்த்தியாக வேண்டும் என்று நினைத்தால் முறையாக பராமரியுங்கள். உங்களின் முடி  உதிர்வை தடுத்து வளர்ச்சியை தூண்டச் செய்யும் 3 பொருட்களைக் கொண்டு எப்படி சிகிச்சை ஆரம்பிக்கலாம் என தொடர்ந்து படியுங்கள்.

யோகி பாபு முடியை பார்த்து ஏங்குறவங்களுக்கு ,முடி வளர செய்யும் மூன்று பொருட்கள்

தேவையானவை :

மீடியம் சைஸ் வெங்காயம் – 5

தேன் – 1/2 கப்

வாசனை எண்ணெய் – 10 துளிகள்.

செய்முறை

ஸ்டெப் – 1

வெங்காயத்தை தோலை உரித்து பொடிப்பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சாறு எடுங்கள். வெங்காயம் பெரிதாக இருந்தால் அதன் காரத்தன்மை கூந்தலில் எரிச்சலை உண்டாக்கும். ஆகவே நடுத்தர அளவில் வெங்காயங்களாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.

ஸ்டெப்- 2 :

தேனை அரைக் கப் (1/2) அளவு எடுத்து அதனை வெங்காயச் சாறுடன் கலக்க வேண்டும். வெங்காயச் சாறுடன் தேன் நன்றாக சேரும் வரை கலக்குங்கள். இல்லையென்றால் தலையில் த்டவும்போதும் வெங்காயச் சாறு தனியாக தேன் தனியாக பிசுபிசுப்புடன் இருக்கும்.

ஸ்டெப் – 3

இந்த வெங்காய- தேன் கலவையில் இறுதியாக வாசனை எண்ணெய் 10 துளிகள் சேருங்கள். வாசனை எண்ணெய் எதுவாகவும் இருக்கலாம். உங்களுகு பொடுகு இருந்தால் தெயிலை மர எண்ணெய் அல்லது யூகலிப்டஸ் எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம். வறட்சி அதிகம் என்றால் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை :

இப்போது இந்த கலவையை நீங்கள் பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஸ்கால்ப்பாக எடுத்து இந்த கலவையை தடவுங்கள். ஸ்கால்ப்பில் படும்படியே நன்றாக தடவுவது முக்கியம். மீதமுள்ள எண்ணெயை நுனி வரை பூசுங்கள்.

வாரம் 2 முறை :

அதனை அப்படியே 45 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் வெதுவெதுப்பான நீரில் மைல்ட் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். வாரம் இருமுறை செய்தால் விரைவில் நல்ல பலன் தரும்.

வெங்காயத்தின் பலன் :

வெங்காயத்தில் சல்ஃபர் இருக்கிறது. முடி மெலிவதை தடுக்கிறது. முடி  செல்களை தூண்டுவதால் மிகவும் பாதிக்கப்பட்ட முடி  கூட ஊட்டம் பெற்று அடர்த்தியாக  வளரத் தொடங்கும். நரை முடியை கூட தடுக்கும்.