உருமாறி வரும் கொரானாவிடம் ,தடுமாறி விழாமல் நம்மை காக்கும் மூலிகைகள் .

 

உருமாறி வரும் கொரானாவிடம் ,தடுமாறி விழாமல் நம்மை காக்கும்  மூலிகைகள் .

நாட்டில் கொரோனாவின் முதலாவது அலை, மூத்த குடிமக்களை அதிகம் பாதித்த நிலையில், பின்னர் வந்த இரண்டாது அலை இளைஞர்கள் நடுத்தர வயதினரை பெரிதும் பாதித்தது. இந்நிலையில், மூன்றாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

உருமாறி வரும் கொரானாவிடம் ,தடுமாறி விழாமல் நம்மை காக்கும்  மூலிகைகள் .

உருமாறி வரும் கொரானாவிடம் ,தடுமாறி விழாமல் நம்மை காக்கும் மூன்று மூலிகைகள் .

காலையில் இஞ்சி ,பகலில் சுக்கு ,மாலையில் கடுக்காய் என்பது நோய் எதிர்ப்பு சக்தியை  உடலுக்குகொடுத்து ,உருமாறி வரும் பல கொரானா வைரஸ் மட்டுமல்லாமல் அனைத்து வைரஸ்களையும் கொல்லும்  வைத்திய முறை. ஆனால் இதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் அறிய வேண்டும்.

முன்னோர்களின் வாழ்க்கையில் பெரும்பாலும் மருந்து தான் உணவாக இருந்தது. நோயறிதலுக்கு முன்னரே நோயை தவிர்க்க மருந்தை உணவாக்கி எடுத்துகொண்டார்கள். அவற்றிலும் சரியான முறையில் சீரான இடைவெளியில் சரியான பொருளுடன் சேர்த்து எடுக்கும் போது அது உணவாகவும் சிறந்த மருந்தாகவும் செயல்படும்.

உடல் ஆரோக்கியம் சீராக இருக்க காலையில் இஞ்சியும், பகலில் சுக்கும், மாலையில் கடுக்காயும் மிகச்சிறப்பாக உதவும் என்று சொல்வதுண்டு. இதை எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்து தான் பார்க்க போகிறோம்.

​இஞ்சி

இஞ்சை காலையில் எடுக்க வேண்டும். இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து கால் டீஸ்பூன் அளவு எடுத்து அப்படியே சாப்பிடலாம். இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி சாறு எடுத்து அதை தேநீராக்கி குடிக்கலாம்.

இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டு அளவு எடுத்து அம்மியில் வைத்து நசுக்கி அதன் சாறை எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலக்கவும். சிறிது நேரம் கழித்து பார்த்தால் இஞ்சி சாறு தண்ணீரின் அடியில் அப்படியே படிந்திருக்கும். பிறகு மேலாக்க அந்த நீரை வடித்து எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து குடிக்கலாம்.

காலையில் குடிப்பதால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள். இஞ்சி மிட்டாய், இஞ்சி மொரப்பா போன்றவையும் கடைகளில் கிடைக்கிறது. அதையும் வாங்கி சாப்பிடலாம்.

​பலன்கள்

இஞ்சி செரிமான பிரச்சனைக்கு அற்புதம் செய்யும் மருந்து . நாள் முழுக்க உண்ணும் உணவை செரிமானமாக்க உதவும். இதனால் வயிறு கோளாறு, வயிறு உப்புசம், வாய்வு தொல்லை இருக்காது. அதனோடு அஜீரணக்கோளாறும் உண்டாகாது. அதனால் மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.

உடலில் கழிவுகள் தேங்காமல் வெளியேறிவிடுவதால் எப்போதும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வலம் வரலாம். இஞ்சியை தோல் சீவி மட்டுமே பயன்படுத்த வேண்டும். இஞ்சியை அளவாக எடுப்பது நல்லது.

​சுக்கு

மதிய வேளையில் சுக்கு என்பதால் சுக்கை தோல் நீக்கி ( இது குறித்து முன்னரே பார்த்திருக்கிறோம்) சுத்தம் செய்து பொடியாக்கி வைக்கவும். சுக்கு பொடியை தேனில் குழைத்து சாப்பிடலாம்.

சுக்கு குழம்பு வைத்து சாப்பிடலாம். மதிய உணவுக்கு பிறகு சுக்கு மிட்டாய் சாப்பிடலாம். சிறந்த முறை சுக்கு பொடியை தேனில் குழைத்து சாப்பிடுவதுதான். சுக்கை முன்னோர்கள் மதிய வேளையில் உணவுக்கு பிறகு சுக்கு காபியாக தயார் செய்து குடித்து வந்தார்கள்.

மதிய வேளையில் சுக்கு, தனியா, விதைகள், மிளகு, ஏலக்காய் சேர்த்து பொடியாக்கி குடித்து வந்தார்கள். கை வைத்திய முறைகளில் சிறந்த பெரியோர்கள் இதனுடன் அடாதோடை இலை பொடி , துளசி, கற்பூரவல்லி இலைகளையும் பொடியாக்கி சேர்த்து காபியாக குடித்து வந்தார்கள்.

​பலன்கள்

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை என்று சொல்வார்கள் இஞ்சியை காயவைத்த பிறகு கிடைக்கும் சுக்கு இஞ்சியை காட்டிலும் பலன் தரக்கூடியது. சளி, காய்ச்சல், இருமல் பிரச்சனைகளை ஓடிவிட செய்யும். அதனால் தான் குளிர்காலங்களில் அதிகம் வாட்டும் சளி, இருமல் பிரச்சனைகளை வராமல் தடுக்க சுக்கு காபி குடிக்கிறார்கள்.

சுக்கு உஷ்ணத்தை உண்டாக்க கூடியது. இதை ஈடு செய்ய பனைவெல்லத்தை சேர்த்து குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மட்டும் சுக்கு அளவை குறைத்து கொடுக்க வேண்டும்.

கடுக்காய்

கடுக்காய். நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் அருமருந்து கடுக்காய். கடுக்காயை வாங்கி வந்து தோல் நீக்கி தோலை இடித்து பயன்படுத்த வேண்டும். இதை மாலையில் என்று சொல்வதை காட்டிலும் இரவில் பயன்படுத்தலாம்.

இரவு இரண்டு கடுக்காயை இடித்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பாதியாக சுண்ட காய்ச்சி விடவும். பிறகு இதை குடிக்க வேண்டும். தினமும் குடிக்கலாம். பக்கவிளைவுகள் இருக்காது.

​பலன்

கடுக்காய் உடல் கழிவை வெளியேற்றும். மலம் உடலில் தங்காமல் வெளியேற்ற தூண்டும். வாய்வு பிரச்சனைகளை போக்கும். மூலப்பிரச்சனை கடுமையாக இருந்தால் கூட அதை சரிசெய்யும் குணம் கடுக்காய்க்கு உண்டு

தொடர்ந்து மூன்று வேளையும் இதை சரியான அளவில் எடுப்பதால் உடலில் எவ்வித பக்கவிளைவும் நேராது. ஒவ்வாமை இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்து எடுக்க வேண்டும். உடலில் வேறு நோய்கள் கொண்டிருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுப்பது பாதுகாப்பானது.

கொரோனா வைரஸ் பல திரிபுகள் உருவாகி வருகின்றன என்பதால், அதன் பாதிப்பிலிருந்து தப்பிக்க கோவிட் -19 தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம்.உடல் பருமன், டைப் -1 நீரிழிவு நோய் அல்லது நோயெதிர்ப்பு குறைவாக உள்ள, அல்லது வேறு நோய்கள் ஏதெனும் இருக்கும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான  ஆபத்து அதிகம் உள்ளது.