கொரானாவின் அடுத்த அலையின் வலையில், குழந்தைகள் சிக்காமலிருக்க சில டிப்ஸ் .

 

கொரானாவின் அடுத்த அலையின் வலையில், குழந்தைகள்  சிக்காமலிருக்க சில டிப்ஸ் .

கொரோனாவின் முதல் அலையின் போது பெரும்பாலான குழந்தைகள் பாதிக்க படவில்லை. அப்படியே அவர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு அறிகுறிகுறிகள் ஏதும் தென்படாமல் தான் இருந்தது. இது பெற்றோர்களுக்கும் எல்லோருக்குமே சற்று ஆறுதல் அளித்தது. மட்டுமல்லாமல் மன தைரியத்தையும் தந்தது.

கொரானாவின் அடுத்த அலையின் வலையில், குழந்தைகள்  சிக்காமலிருக்க சில டிப்ஸ் .

தற்போது கொரோனா இரண்டாம் அலையில் குழந்தைகள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அறிகுறிகளும் அதிகமாகவே தென்படுகிறது. இது பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் கூட நிம்மதியை கெடுக்கும் வகையில் உள்ளது. இதை தடுக்கவோ எதிர்கொள்ளவோ என்ன செய்யவேண்டும் என்பது யாருக்கும் புரியவில்லை.

கொரானாவின் அடுத்த அலையின் வலையில், குழந்தைகள் சிக்காமலிருக்க குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டியவை:

கொரோனா நம் நாட்டைவிட்டுச் செல்லும்வரை, `உங்கள் நண்பர்களைத் தொடாமல் இருங்கள். உங்கள் கைகளை நீட்டினால் வருகிற தூரத்திற்கு நண்பர்களை விலகி இருக்கச் சொல்லுங்கள். அதுதான் உங்கள் இருவருக்கும் நல்லது’ என்று சொல்லிக்கொடுங்கள்.

இருமும்போதும் தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை எப்படி மறைக்க வேண்டும் என்பதை, அவர்களுடைய பொம்மைகளை வைத்தே டெமோ செய்துகாட்டுங்கள்.

ஹேண்ட் சானிட்டைஸர் பயன்படுத்தச் சொல்லிக்கொடுங்கள். பாட்டுப்பாடிக்கொண்டே சோப்பு போட்டு கைகளைக் கழுவச் சொல்லுங்கள். மறுக்காமல் சந்தோஷமாகச் செய்வார்கள் குழந்தைகள்.

அடுத்தவர்களைத் தொடக்கூடாது, கூட்டமாக நிற்கக்கூடாது, கூட்டம் சேர்கிற இடத்தில் இருக்கக்கூடாது என்று சொல்லிக் கொடுங்கள்.

ஸ்பிரே செய்யக்கூடிய பாட்டில்களில் வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றி, வெள்ளைத்துணியில் ஸ்பிரே செய்து, வாயையும் மூக்கையும் மூடாமல் இருமினாலும் தும்மினாலும் இப்படித்தான் கொரோனா வைரஸ் பரவும் என்று சொல்லிக்கொடுங்கள்.

சோப் போட்டு கைகளைக் கழுவ மறுக்கும் பிள்ளைகளின் கைகளில் சிறிதளவு க்ளிட்டர்ஸைத் தடவிவிட்டு, வெறும் தண்ணீரால் கழுவச் சொல்லுங்கள். கையெங்கும் ஒட்டிக்கொண்டிருக்கும் க்ளிட்டரைக் காட்டி, இப்படித்தான் கொரோனா வைரஸும் உங்கள் கைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

உங்கள் கைகளால் முகத்தைத் தொடுவது, கண்களைக் கசக்குவது, மூக்கில் விரல் நுழைப்பது போன்றவற்றைச் செய்யாதீர்கள். உங்கள் நண்பர்களிடமும் இதைச் சொல்லுங்கள்.

வீட்டில் ஆசையாக வளர்க்கும் செல்லப்பிராணிகள் சாப்பிடுவதற்குகென்று கிண்ணம் வைத்திருப்போம். காலையில் வைத்த உணவில் செல்லப்பிராணி சாப்பிட்டது போக மீதமிருப்பதை அற்புறப்படுத்தி தூய்மை செய்யாமல் சிறிது நேரம் கழித்து சாப்பிடும் என்று மாலை வரை அப்படியே வைத்திருப்போம். இதனால் அந்த கிண்ணம் மட்டுமில்லாமல் அதை சுற்றியுள்ள இடமும் பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும். இது செல்லப்பிராணிக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீங்கை விளைவிக்கும்.

சில வீடுகளில் சைவம், அசைவம் இரண்டுக்கும் ஒரே கட்டிங் போர்டை பயன்படுத்துவார்கள். இறைச்சி, மீன் போன்றவற்றை வெட்டியபின் கழுவி வைத்தாலும், அதில் பாக்டீரியா போன்ற கிருமிகள் இருக்கத்தான் செய்யும். அவை காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டும் போது உணவோடு கலந்து உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். எனவே காய்கறிகளுக்கும், இறைச்சிக்கும், தனித்தனியே கட்டிங் போர்டுகள் வைத்திருக்க வேண்டும்.