குழந்தைக்கு தடையில்லாம பேச்சும் ,மூச்சும் வர இதை நாக்கில் தேச்சி விடுங்க.

 

குழந்தைக்கு  தடையில்லாம பேச்சும் ,மூச்சும் வர இதை நாக்கில் தேச்சி விடுங்க.

 

வசம்பு மூலிகையின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்

வசம்பு குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. மேலும் குழந்தைக்கு நல்ல பேச்சு திறன், நல்ல கண் பார்வை திறன், அழகு, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல் போன்ற எண்ணற்ற பலன்களை அள்ளி வழங்குகிறது.

கொடிய விஷத்தையும் வசம்பு போக்கிவிடும். இதை தூள் செய்து, தேனில் 2 ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் தொற்று நோய்கள் நீங்கும். விஷம் அருந்தியவர்களுக்கு 3 ஸ்பூன் வசம்புவை கொடுத்தால், விஷம் முழுக்க வெளியே வந்துவிடும்.

குழந்தைக்கு  தடையில்லாம பேச்சும் ,மூச்சும் வர இதை நாக்கில் தேச்சி விடுங்க.

காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. இதனால் குழந்தைகளுக்கு பசியின்மை, தொற்று நோய்கள் வராது. எனவே பிள்ளை வளர்ப்பான் என்ற பெயரும் இதற்கு உண்டு.

வசம்பு உடன் சுடான தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம். எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அனைவரும் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

வசம்பு  நாம் சாப்பிடும் உணவுகளை நன்றாக செரிமானம் செய்து உடலுக்கு சக்தியை அளிக்கும் பணியை  செய்கிறது. வயிற்றில் பூச்சி தொல்லைகள், வாயு கோளாறுகள், உப்பசம் மற்றும் அஜீரணம் ஆகிய அனைத்து பிரச்சனைகளுக்கும் வசம்பை நன்றாக நசுக்கி, அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறிய பின்பு அருந்தினால் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.

 மழை மற்றும் குளிர்காலங்களில் அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒன்றாக சளி அல்லது ஜலதோஷம் இருக்கிறது. வசம்பு ஜலதோஷ தொல்லைக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. கால் ஸ்பூன் அளவு வசம்பை வெந்நீரில் கலந்து பருகி வந்தால் ஜலதோஷம் மற்றும் தொண்டைகட்டு போன்றவை சீக்கிரத்தில் குணமாகும்.

பொடுகு கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், தலைமுடிகளை முறையாக பராமரிக்காதவர்களுக்கும் பொடுகு தொல்லை ஏற்படுவது வாடிக்கையானது தான். பொடுகு தொல்லைக்கு சிறந்த இயற்கை மருந்தாக வசம்பு இருக்கிறது. நசுக்கிய வசம்பு, சிறிதளவு வேப்பிலைகள் ஆகியவற்றை தேங்காய் எண்ணையில் கொதிக்க வைத்து, ஆற வைத்து அந்த எண்ணையை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை சீக்கிரம் குணமாகும்.

சிறு குழந்தைகள் பழங்காலத்தில் பிறந்து 1 வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கு சிறிதளவு வசம்பை தேனில் குழைத்து கை குழந்தைகளின் நாக்கில் தடவி விடும் பழக்கத்தை அதிகம் மேற்கொண்டனர். இப்படி செய்வதால் சிறு குழந்தைகளுக்கு சீக்கிரமாக பேச்சு திறன் கைவரப்பெறுவதோடு உணவில் இருக்கும் நச்சுகளால் எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்கும் ஒரு நச்சு முறிப்பான் மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.

வசம்பு, காயம், சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் கடுக்காய் தோல் இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இதை 1-2 கிராம் அளவு குழந்தைக்கு கொடுத்து வந்தால் சீரணமின்மை, வயிற்று போக்கு மற்றும் வாய்வு போன்றவற்றை குணமாக்கும்.