உங்க குழந்தையை ‘கண்ணாடி’ன்னு கூப்பிடாமலிருக்க , முன்னாடியே இந்த உணவை கொடுங்க.

 

உங்க குழந்தையை ‘கண்ணாடி’ன்னு கூப்பிடாமலிருக்க , முன்னாடியே இந்த உணவை கொடுங்க.

தினமும் உங்கள் குழந்தைக்கு நல்ல கண் பார்வை கிடைப்பதற்கான உணவுகளை நீங்கள் தருகிறீர்களா என்று உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம். இங்கே கண் பார்வைக்கான சில உணவுகளின் பட்டியல் வழங்கியுள்ளோம்

உங்க குழந்தையை ‘கண்ணாடி’ன்னு கூப்பிடாமலிருக்க , முன்னாடியே இந்த உணவை கொடுங்க.

1. முட்டை

முட்டையில் இருக்கும் ஜின்ங்க் மற்றும் லுடீன் போன்ற சத்துக்கள் கண் குறைபாடு ஏற்படாமல் பெரிதளவு காக்கிறது.முட்டைக் கருவில் உள்ள ‘ஸிக்ஸாந்தின்’ புற ஊதா கதிர் வீச்சின் பாதிப்புகளிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.இதனால் உங்கள் கண் பார்வை ஆரோக்கியமாகிறது.

2. மீன்

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கண் பார்வைக்கு மிகவும் தேவையானது. இது ரெடினாவின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்குப் பெரிதும் உதவும்.கூடுதலாகக் கண்கள் உலர்ந்து போவதைத் தடுக்கிறது.பல வகையான கடல் மீன்களில் இந்த சத்து உட்படப் பல உயிர்ச்சத்துகள் நிறைந்து உள்ளன.குறிப்பாக சால்மன்,டுனா,மேக்கிரல்,ட்ராவுட் போன்ற மீன் ரகங்களைக் கூறலாம்.

3. கீரை வகைகள்

பச்சைக் கீரை வகைகளில் அதிகம் உயிர்ச்சத்து சி மற்றும் இ சத்து நிறைந்துள்ளன. மேலும் இதில் கரோட்டினாய்டுகள் மற்றும் லியூடீன் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாகப் பொன்னாங்கண்ணி, முருங்கை,பசலை,புதினா,பிரோக்கோலி போன்ற கீரை வகைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. இதனால் இதைத் தொடர்ந்து உட்கொள்வதால் நீண்ட கால கண் நோய்களை வரவிடாமல் தடுக்கவும் குணப்படுத்தவும் முடிகிறது.

4.கிவி : கிவி மிகச் சிறந்த சத்துக்களை கொண்டது. கண்களில் உண்டாகும் சிரமம் மற்றும் அழுத்தத்தை குறைக்கும். கண் பார்வையை தெளிவுபடுத்தும்.

5.ஆரஞ்சு : ஆரஞ்சில் அதிக விட்டமின் சி உண்டு. கண்களில் உண்டாகும் செல்சிதைவுகளை தடுக்கிறது. கண் பார்வையை அதிகரிக்கச் செய்யும்.

6.கேரட் : கேரட் கண்ணிற்கான சிறந்த உணவு. அதிலுள்ள பீட்டா கரோடின் கண் பார்வையை தூண்டும். தினமும் ஒரு கேரட் சாப்பிடுங்கள்.முடிந்த வரை வாரம் ஒரு நாட்களாவது சாப்பிடுங்கள்

7.மஞ்சள் : கலப்படமில்லாத மஞ்சள் உங்களுக்கு பலவித நோய்களிலுருந்து காக்கிறது. ஆனால் நாம் துரதிருஷ்டவசத்திடம் இருக்கிறோம். ராசயனங்கள் கலந்த மஞ்சள்தான் வணிகத்தில் கிடைக்கிறது. ஆகவே மஞ்சள் பொடி ரெடிமெட்டாக வாங்காமல் மஞ்சள் கிழங்கை வாங்கி பொடி செய்து கொள்ளுங்கள். இது கண்களில் 40 வயதிற்கு மேல் கேடராக்ட் வருவதை தடுக்கும்.

8. பூக்கோசு

இதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் கண் பார்வைக்கு மிகவும் உகந்தது.ஆக இதை உணவில் அடிக்கடி சேர்ப்பது நன்மைப் பயக்கும். பொதுவாகவே குழந்தைகள் பூக்கோசை விரும்பி உண்பார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

9. சர்க்கரை வள்ளிக் கிழங்கு

இதில் பீடாகரோடின் மற்றும் ஊட்டச்சத்து ஈ நிறைந்துள்ளன.இதை உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்வதாலும் கண் பார்வை மேம்படும்.

10. பால் பொருட்கள்

பால்,வெண்ணெய்,தயிர்,நெய்,பன்னீர் என்று அனைத்திலுமே ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது.இவற்றை போதிய அளவு உணவில் எடுத்துக் கொள்வதால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

11. தண்ணீர்

தண்ணீர் என்பது வளமான கண் பார்வைக்கு இன்றியமையாதது.பல்வேறு கண் கோளாறுக்குக் கண்களின் ஈரப்பதம் குன்றுவதே காரணம்.இதைத் தவிர்க்க போதிய தண்ணீர் அருந்த வேண்டும்.

அதாவது தினம் 2 லிட்டர் தண்ணீர் அருந்துவது உகந்தது

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த உணவுகள் மட்டுமல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு மற்ற உணவு வகைகளையும் அதிகம் கொடுக்கலாம். நாட்டுக் கோழி, ஆட்டிறைச்சி, ஆற்று மீன்கள் என்று நல்ல சத்து நிறைந்த உணவைத் தரலாம். மேலும் பசும் பால், பாரம்பரிய அரிசி வகைகள், உதாரணத்திற்குக் குதிரைவாலி, சாமை, திணை, வரகு, கைக்குத்தல் அரிசி என்று பல வகை அரிசி வகைகளையும் நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பாரம்பரிய பருப்பு மற்றும் அரிசி வகைகள் அதிக சத்துக்கள் நிறைந்தது.