கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்- கணவர், 2 குழந்தைகளை தீவைத்து எரித்த கொடூர பெண் கைது

 

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்- கணவர், 2 குழந்தைகளை தீவைத்து எரித்த கொடூர பெண் கைது

திருப்பத்தூர்

நாட்றம்பள்ளி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளை பெட்ரோலை ஊற்றி எரித்த கொடூர பெண்ணை போலீசார் கைதுசெய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகேயுள்ள சோமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார்(30). இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற சசிகுமார், 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்- கணவர், 2 குழந்தைகளை தீவைத்து எரித்த கொடூர பெண் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது . அதனை தொடர்ந்து திடீரென இரவில் சசிகுமார் மற்றும் அவரது குழந்தைகள் மீதும் தீப்பற்றி எரிந்த நிலையில், மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், 80 சதவீத தீக்காயம் அடைந்த சசிகுமார் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பாக நீதிபதியிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் தன் மீதும், குழந்தைகள் மீதும் மனைவி பிரியா பெட்ரோலை ஊற்றி தீவைத்ததாக தெரிவித்தார். முன்னதாக, சசிகுமார் குழந்தைகள் மீது தீவைத்து தற்கொலைக்கு முயன்றதாக பிரியா அளித்த புகாரின் பேரில், நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். சசிகுமார் அளித்த வாக்குமூலத்தின் பேரில் பிரியாவிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்- கணவர், 2 குழந்தைகளை தீவைத்து எரித்த கொடூர பெண் கைது

3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்ற சசிகுமார், குடும்பத்தினருடன் பேசுவதற்காக செல்போனை வாங்கி அனுப்பியுள்ளார். அந்த போனில் பேஸ்புக், டிக்டாக் என அனைத்து செயலிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்த பிரியாவுக்கு, நிறைய ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் அடிக்கடி ஊர் சுற்றியும் வந்துள்ளார். தாயின் தவறான போக்கை அறிந்த அவரது மகன், சசிகுமாரிடம் தகவல் தெரிவித்தார். இதனால் பணியை துரந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய சசிகுமார், பிரியாவை கண்காணித்து வந்துள்ளார். இந்த நிலையில் , பிரியா ஆண் நண்பர்களுடன் சுற்றுவதை நேரில் கண்ட அவர், இதுகுறித்து அவரை கண்டித்ததுடன், திருந்தி வாழ அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். பின்னர் குழந்தைகளுடன் அவர் உறங்க சென்ற நிலையில், தனது சுகத்திற்கு தடையாக உள்ள கணவர் மற்றும் குழந்தைகளை கொல்ல திட்டமிட்ட பிரியா, ஒரு மாதத்திற்கு முன்பாக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து அவர்கள் மீது ஊற்றி தீவைத்ததை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து பிரியாவை கைதுசெய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.