தேசிய பத்திரிகை தினம் : முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

 

தேசிய பத்திரிகை தினம் : முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி பத்திரிகை, டிவிகளில் பணியாற்றும் நண்பர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய பத்திரிகை தினம் : முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக பத்திரிக்கை துறை விளங்குவதாகவும் முதல்வர் தனது அறிக்கையில் பாராட்டு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் பத்திரிகை துறையின் பணிகளை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 16-ம் நாள் தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றிடும் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய பத்திரிகை தினம் : முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு நடுநிலையோடு எடுத்துரைப்பதோடு, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக விளங்கும் பத்திரிகை துறையின் மகத்தான பணியினை இந்த இனிய நாளில் பாராட்டி, பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது தேசிய பத்திரிகை தின வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”என குறிப்பிட்டுள்ளார்.