’நாட்டுக்காக முதல் வெற்றி’ பெருமிதம் பொங்க பதிவிட்ட நடராஜன்!

 

’நாட்டுக்காக முதல் வெற்றி’ பெருமிதம் பொங்க பதிவிட்ட நடராஜன்!

நடராஜன் இந்திய அணியில் எப்போதேனும் தோன்றும் அரிய வீரர் போல, எல்லோராலும் கொண்டாடப்படுகிறார். ஹாகிர்ஹான், பும்ரா போன்றோர் வருகையின்போது இப்படிக் கொண்டாடப் பட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் சேலம் அருகே உள்ள சின்ன கிராமத்திலிருந்து இன்று இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் விளையாடி வருகிறார் நடராஜன்.

ஆஸ்திரேலியா – இந்தியா ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா தோற்றிருந்தது. மூன்றாம் போட்டியில்தான் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதுவும் ப்ளே ஆஃப் ஓவர்களில் விக்கெட் எடுத்த ஒரே பவுலர் நடராஜன் மட்டுமே.

’நாட்டுக்காக முதல் வெற்றி’ பெருமிதம் பொங்க பதிவிட்ட நடராஜன்!

அதைத் தொடர்ந்து டி20 போட்டித் தொடரில் நடந்து முடிந்திருக்கும் 2 போட்டிகளிலும் தலா 2 விக்கெட்டுகளை அதிலும் முக்கிய பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கினார் நடராஜன். நேற்றைய போட்டியில் நடராஜனே ஆட்டநாயகன் என்று ஆட்டநாயகன் விருது பெற்ற ஹிர்திக் பாண்டியா சொல்லும் அளவுக்கு நடராஜனின் பங்களிப்பு இருந்தது. நடராஜன் இந்திய அணியின் சொத்து என்று கேப்டன் விராட் கோலி புகழ்ந்திருந்தார்.

தான் கலந்துகொண்ட முதல் டி20 தொடரை இந்திய அணி வென்ற மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார் நடராஜன். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நாட்டிற்காக முதல் வெற்றி.. இது ரொம்பவே ஸ்பெஷலானது; மறக்க முடியாதது’ என்று பதிவிட்டுள்ளார்.

’நாட்டுக்காக முதல் வெற்றி’ பெருமிதம் பொங்க பதிவிட்ட நடராஜன்!

நடராஜன் காத்திருக்கும் பவுலராகவே ஆஸ்திரேலியாவுக்கு தேர்வானார். வருண் சக்கரவர்த்தி காயம் அடைந்ததால், டீம்க்குள் வந்தார். இப்போது அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறிவிட்டார். டெஸ்ட் அணியிலும் நடராஜன் இடம்பெறக்கூடும் என்று பேசப்படுகிறது.