பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு நிகரான தலைமை காங்கிரசில் இல்லை… நரோட்டம் மிஸ்ரா

 

பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு நிகரான தலைமை காங்கிரசில் இல்லை… நரோட்டம் மிஸ்ரா

பிரதமர் மோடி, அமித் ஷா நிகரான தலைமை காங்கிரசில் இல்லை என்று மத்திய பிரதேச பா.ஜ.க. அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார்.

மத்திய பிரதேச உள்துறை அமைச்சராக இருப்பவர் பா.ஜ.கவின் நரோட்டம் மிஸ்ரா. மற்ற பா.ஜ.க. தலைவர்களை காட்டிலும் காங்கிரஸை நரோட்டம் மிஸ்ரா கடுமையாக கிண்டலுடன் விமர்சனம் செய்வார். தற்போது காங்கிரஸ் கட்சி பொருத்தமற்ற கட்சியாக மாறி விட்டது, அந்த கட்சியில் மோடி, அமித் ஷாவுக்கு நிகரான தலைமை இல்லை என்று நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார்.

பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு நிகரான தலைமை காங்கிரசில் இல்லை… நரோட்டம் மிஸ்ரா
நரோட்டம் மிஸ்ரா

இது தொடர்பாக நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நிகரான தலைமை காங்கிரசில் இல்லை. சுதந்திர இயக்கத்திற்கு பிறகு மகாத்மா காந்தி தற்போது காங்கிரஸ் பொருத்தமற்றது என்று சொன்னார். தற்போது காங்கிரஸ் பொருத்தமற்றது என்று அதன் கூட்டணி கட்சிகளே சொல்கின்றன. காங்கிரசும் அதன் தலைமையும் பொருத்தமற்றதாகி விட்டது என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு நிகரான தலைமை காங்கிரசில் இல்லை… நரோட்டம் மிஸ்ரா
காங்கிரஸ்

மகாராஷ்டிராவில் காங்கிரசின் கூட்டணி கட்சியான சிவ சேனா கடந்த சில தினங்களுக்கு முன் தனது அரசியல் பத்திரிகையான சாம்னாவில், காங்கிரஸ் தலைமையை பா.ஜ.க. துணிந்து கிண்டல் செய்வது ஏன் என்பதை காங்கிரஸ் காரிய கமிட்டி விவாதிக்க வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நரேந்திர மோடி போன்ற வலுவான தலைவர் மற்றும் அமித் ஷா போன்ற அரசியல் நிர்வாகி இல்லை என்று செய்தி வெளியிட்டு இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.