விவசாயிகள் போராட்டத்தில் ஷாஹீன் பாக் போராட்டங்களின் பின்னணியில் இருந்த தீய சக்திகள்… பா.ஜ.க. பகீர் தகவல்

 

விவசாயிகள் போராட்டத்தில் ஷாஹீன் பாக் போராட்டங்களின் பின்னணியில் இருந்த தீய சக்திகள்… பா.ஜ.க. பகீர் தகவல்

விவசாயிகளின் போராட்டத்தில் ஷாஹீன் பாக்கில் நடந்த சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. எதிர்ப்பு போராட்டங்களின் பின்னணியில் இருந்த தீய சக்திகள் உள்ளதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார்.

மத்திய பிரதேச பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச உள்துறை அமைச்சருமான நரோட்டம் மிஸ்ரா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது டெல்லியில் நடைபெற்று விவசாயிகள் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் மிஸ்ராவிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

விவசாயிகள் போராட்டத்தில் ஷாஹீன் பாக் போராட்டங்களின் பின்னணியில் இருந்த தீய சக்திகள்… பா.ஜ.க. பகீர் தகவல்
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளுடன் ஒரு அர்த்தமுள்ள உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது. விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தீர்வு கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் யாரும் அழைக்காமல் அங்கு சென்றடைந்த சில சீர்குலைக்கும் சக்திகள் உள்ளன, அவர்கள் ஒரு தீர்வை விரும்பவில்லை. அவர்கள் இடையூறுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறர்கள்.

விவசாயிகள் போராட்டத்தில் ஷாஹீன் பாக் போராட்டங்களின் பின்னணியில் இருந்த தீய சக்திகள்… பா.ஜ.க. பகீர் தகவல்
விவசாயிகள் போராட்டம்

ஷாஹீன் பாக் நகரில் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் இருந்த சக்திகள் இவை. ஆனால் இது போன்ற கூறுகளை அடையாளம் காணும் அளவுக்கு நம் விவசாயிகள் புத்திசாலிகள். எனவே விவசாயிகள் எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை காண்போம் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். டெல்லியில் நடந்து கொண்டு இருக்கும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக குவாலியரிலிருந்து விவசாயிகள் டிராக்டரில் சென்றனர்.