ரமலான் பண்டிகை வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
May 25, 2020, 08:52 IST1590376946000
ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இன்று கொண்டாடி வருகின்றனர். ஊரடங்கால் வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், “ரம்ஜான் பண்டிகையால் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும். எல்லோரும் ஆரோக்கியமாவும், வளமாகவும் இருக்க வாழ்த்துகள்”என்று குறிப்பிட்டுள்ளார்.