மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டும் பிரதமர் மோடி!

 

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டும் பிரதமர் மோடி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,02,82,833 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,449 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,22,408 ஆக உயர்ந்துள்ளது. 1,66,13,292 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில் 3,20,289 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டும் பிரதமர் மோடி!

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு, ஆக்சிஜன், மருந்துகள் இருப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி ஆலோசிக்கிறார். தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தவும், சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.