“ஆட்சியை மாற்றுவதும் பாஜகவுக்குகைவந்த கலை” புதுச்சேரி முதல்வர் அவசர ஆலோசனை!

 

“ஆட்சியை மாற்றுவதும் பாஜகவுக்குகைவந்த கலை” புதுச்சேரி முதல்வர் அவசர ஆலோசனை!

வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி, புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். மேலும், பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோவில் பதிவு செய்யவும் ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் முதல்வர் நாராயணசாமி இல்லத்தில் திடீரென அவசர ஆலோசனை நடத்தினார்.

“ஆட்சியை மாற்றுவதும் பாஜகவுக்குகைவந்த கலை” புதுச்சேரி முதல்வர் அவசர ஆலோசனை!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “21 ஆம் தேதி மாலை மீண்டும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்; தற்போதைய கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியை மாற்றுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு கைவந்த கலை” என தெரிவித்தார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கும் தலா 14 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது.