தமிழிசைக்கு புதுச்சேரி முதல்வராக ஆசை: நாராயணசாமி

 

தமிழிசைக்கு புதுச்சேரி முதல்வராக ஆசை: நாராயணசாமி

புதுச்சேரி ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் அம்மாநிலத்திற்கு முதல்வராக ஆசைப்படுவதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் வரும் 3ஆம் தேதி முதல் ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் முழுநேரம் இயக்கப்படும் என ஆளுநர் தமிழிசை அறிவித்திருந்தார்.

தமிழிசைக்கு புதுச்சேரி முதல்வராக ஆசை: நாராயணசாமி

இந்நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுவை மாணவர்களுக்கான பள்ளி தேர்வு தேதியை தமிழிசை அறிவித்தது சரியானதல்ல. மாணவர்களின் விஷயத்தில் ரிஸ்க் எடுக்கக் கூடாதுதாமரை மலரும் என தமிழகத்தின் முதல்வராக தமிழிசை ஆசைப்பட்டார். ஆனால் அது நடக்காததால் தற்போது புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்து முதல்வராக தமிழிசை ஆசைப்படுகிறார். யாரிடமும் ஆலோசனை கேட்காமல் மாணவர்களுக்கு தேர்வு அறிவித்தது ஏற்புடையதல்ல” என தெரிவித்துள்ளார்.