வாக்கெடுப்பு நடத்தாமல் ஆட்சி கவிழ்ந்ததுனு எப்படி சொல்ல முடியும்? – சட்ட ஆலோசனையில் நாராயணசாமி!

 

வாக்கெடுப்பு நடத்தாமல் ஆட்சி கவிழ்ந்ததுனு எப்படி சொல்ல முடியும்? – சட்ட ஆலோசனையில் நாராயணசாமி!

புதுச்சேரியில் அடுத்தடுத்து நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தார்கள். புதிதாகப் பொறுப்பேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை முதல்வர் நாராயணசாமியைப் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு அடுத்த நாளே ஒரு காங்கிரஸ் எம்எல்ஏவும் ஒரு திமுக எம்எல்ஏவும் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

வாக்கெடுப்பு நடத்தாமல் ஆட்சி கவிழ்ந்ததுனு எப்படி சொல்ல முடியும்? – சட்ட ஆலோசனையில் நாராயணசாமி!

அப்போதே நாராயணசாமி அரசு கவிழ்ந்ததாக முடிவுசெய்யப்பட்டது. சம்பிரதாய முறைப்படி நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாராயணசாமி கொண்டுவந்து உரையாற்றினார். மத்திய அரசை விமர்சித்து அவர் அவையிலிருந்து வெளியேறினார். அதன்பின் சபாநாயகர் சிவக்கொழுந்து அரசு கவிழ்ந்ததாக அறிவித்தார். தற்போது இதுதொடர்பாக நாராயணசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

வாக்கெடுப்பு நடத்தாமல் ஆட்சி கவிழ்ந்ததுனு எப்படி சொல்ல முடியும்? – சட்ட ஆலோசனையில் நாராயணசாமி!

அவர் கூறுகையில், “நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிந்து சட்டப் பேரவையில் உரையாற்றினேன். அந்த நேரத்தில் அரசு கொறடா அனந்தராமன் ஜனாதிபதி தேர்தலில் நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க உரிமையில்லை என்ற பிரச்சினையை எழுப்பினார். அதனை சபாநாயகர் ஏற்காத காரணத்தினால் நாங்கள் எங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி வெளிநடப்பு செய்தோம்.

வாக்கெடுப்பு நடத்தாமல் ஆட்சி கவிழ்ந்ததுனு எப்படி சொல்ல முடியும்? – சட்ட ஆலோசனையில் நாராயணசாமி!

அதன் பிறகு நான் கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் சரியான விதிமுறையைக் கடைப்பிடிக்கவில்லை. அந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிந்து பேசிய பிறகு அதன்மீது வாக்கொடுப்பு நடத்த வேண்டும். நாங்கள் வெளிநடப்பு செய்தாலும் கூட முதலமைச்சர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுகிறேன் என்று சபாநாயகர் அறிவிக்க வேண்டும்.

வாக்கெடுப்பு நடத்தாமல் ஆட்சி கவிழ்ந்ததுனு எப்படி சொல்ல முடியும்? – சட்ட ஆலோசனையில் நாராயணசாமி!

ஆளுங்கட்சியில் யாரும் இல்லாததால் எதிர்க் கட்சியின் எண்ணிக்கையை எண்ணி எவ்வளவு பேர் எதிர்த்து வாக்களிக்கிறார்கள் என்று பதிவுசெய்த பிறகு தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் தீர்ப்பு வழங்குகிறார். வாக்கெடுப்பு நடத்தாமல் எப்படி பெரும்பான்மையை இழந்துவிட்டது என்று சபாநாயகர் சொல்ல முடியும்? இது ஒரு சட்டப் பிரச்னை. இதுசம்பந்தமாக சட்டவல்லுநர்களுடன் கலந்து பேசுவோம்” என்றார்.