சசிகலா போருக்கு தயாராகிவிட்டார்- நாஞ்சில் சம்பத் அதிரடி

 

சசிகலா போருக்கு தயாராகிவிட்டார்- நாஞ்சில் சம்பத் அதிரடி

பெங்களூர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த நாளில் சசிகலா, தனது காரில் அதிமுக கொடியை கட்டி, வெளியில் வந்ததில் இருந்து அவர் ஒரு போருக்கு தயாராகிவிட்டார் என்பது தெரிகிறது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

சசிகலா பெங்களூரு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி ரிசார்ட்டுக்கு ஜெயலலிதாவின் காரில் பயணம் செய்தார். அந்தக் காரில் அதிமுகவின் கொடி பொருத்தப்பட்டிருந்தது. இதிலிருந்து சசிகலா அதிமுகவை கைப்பற்றப் போவதற்கான அறிகுறிகள் தெரிவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சசிகலா போருக்கு தயாராகிவிட்டார்- நாஞ்சில் சம்பத் அதிரடி

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “சசிகலா ஒரு போருக்கு தயாராகிவிட்டார். டி.டி.வி.தினகரன், அதிமுகவை சசிகலா வழி நடத்துவார். சசிகலா சென்னைக்கு வந்த பினன்ர் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் நடைபெறவுள்ளது. தர்மயுத்தம் நடத்தியவரும், நம்பிக்கை துரோகம் செய்தவரும் சசிகலாவால் நிராகரிக்கப்படுவர். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸின் அரசியல் சரித்திரம் முடிவுக்கு வரும் என நம்புகிறேன். தினகரனிடம் எந்த ஜனநாயக பண்பும் இல்லை. அவர் தலைமையில் இருக்கும் அமைப்பு பின்னடைவை சந்திக்கிறது. சசிகலா டிடிவி தினகரனை நம்பி ஒரு பணிகளை ஒப்படைத்து சென்றால் அது வீழ்ச்சியை நோக்கி தான் முடியும்” எனக் கூறினார்.