நந்தி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவர் மீட்பு

 

நந்தி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவர் மீட்பு

திருவள்ளூர்

திருத்தணி அருகே நந்தி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த முதியவரை, தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எல்லைக்குட்பட்ட நேரு நகரை சேர்ந்தவர் ரவி (70). இவர் அந்த பகுதியில் உள்ள நந்தி ஆற்றுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார்.

நந்தி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவர் மீட்பு

கனமழை காரணமாக நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றின் கரையோரம் சென்ற ரவி திடீரென நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது, சுதாரித்துக் கொண்ட அவர் ஆற்றின் நடுவில் இருந்த பாறை மீது ஏறி உயிர் தப்பினார்.

நந்தி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவர் மீட்பு

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். தொடர்ந்து, கரையில் இருந்து ஒரு வீரர் உடலில் கயிற்றை கட்டிக்கொண்டு ஆற்றை நீந்திச்சென்று பாறை அடைந்தார். பின்னர் முதியவருக்கு பாதுகாப்பு உடை வழங்கி தன்னுடன் பத்திரமாக கரை பகுதிக்கு அழைத்து வந்தார். முதியவரை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.