`அப்பா டிரைவர்; டாக்டராக விரும்புகிறேன்!’- பிரதமர் மோடியுடன் உரையாடிய நாமக்கல் மாணவி

 

`அப்பா டிரைவர்; டாக்டராக விரும்புகிறேன்!’- பிரதமர் மோடியுடன் உரையாடிய நாமக்கல் மாணவி

12ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வில் நாமக்கல் மாணவி 500க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். அவருடன் பிரதமர் மோடி உரையாடியுள்ளார்.

நாமக்கல்ல் பரமத்தி சாலையில் உள்ள இ.பி.காலனியை சேர்ந்த லாரி டிரைவர் நடராஜன்- ஜோதி தம்பதியின் மகள்கள் சிவானி, கனிகா. மாணவி கனிகா 10-ம் வகுப்பில் 500-க்கு 475 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். இவரது சகோதரி சிவானி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படிப்பை நிறைவு செய்து உள்ளார்.

நாமக்கல் கிரீன்பார்க் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி கனிகா நடந்து முடிந்த தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இந்த நிலையில் நேற்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, லாரி டிரைவர் நடராஜனின் மகள் கனிகாவுக்கு பாராட்டு தெரிவித்தார். வணக்கம் என்று கூறி தனது உரையை அவர் தொடங்கினார். உரையாடலின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

`அப்பா டிரைவர்; டாக்டராக விரும்புகிறேன்!’- பிரதமர் மோடியுடன் உரையாடிய நாமக்கல் மாணவி

மோடி:- கனிகாஜி, வணக்கம். எப்படி இருக்கிறீர்கள். முதலில், தாங்கள் அடைந்த வெற்றிக்கு வாழ்த்துகள்.

கனிகா:- நன்றி சார். நன்றாக இருக்கிறேன். தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

மோடி:- நாமக்கல் பெயரை கேட்டவுடன், எனக்கு ஆஞ்சநேயர் கோவில்தான் நினைவுக்கு வரும். இனிமேல், உங்களுடன் பேசியதும் நினைவுக்கு வரும். தேர்வுக்கு கஷ்டப்பட்டு படித்து இருப்பீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?

கனிகா:- சார், ஆரம்பத்தில் இருந்தே கஷ்டப்பட்டு படித்தேன். ஆனால் 490 மதிப்பெண்ணை எதிர்பார்க்கவில்லை. 485 அல்லது 486 வரை எதிர்பார்த்தேன்.

மோடி:- உங்கள் பெற்றோர், ஆசிரியர்களின் வெளிப்பாடு எப்படி இருந்தது?

கனிகா:- மிகவும் சந்தோஷப்பட்டனர். பெருமைப்பட்டனர்.

மோடி: உங்களுக்கு பிடித்தமான பாடம்?

கனிகா:- கணிதம்.

மோடி:- உங்கள் எதிர்கால திட்டம்?

கனிகா:- டாக்டராக விரும்புகிறேன், சார்.

`அப்பா டிரைவர்; டாக்டராக விரும்புகிறேன்!’- பிரதமர் மோடியுடன் உரையாடிய நாமக்கல் மாணவி

மோடி:- உங்கள் பெற்றோரும் மருத்துவ துறையில் இருக்கிறார்களா?

கனிகா:- இல்லை சார். அப்பா, ஒரு டிரைவர். என் அக்காள்தான் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருக்கிறார்.

மோடி:- உங்கள் அப்பா நல்ல காரியம் செய்திருக்கிறார். அவர் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

பிரதமர் மோயுடனான உரையாடல் குறித்து மாணவி கனிகா கூறுகையில், “”நாட்டின் பிரதமர் என்னை பாராட்டுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி என்னை பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். அதே நேரத்தில் பிரதமரின் பாராட்டு இன்னும் பல சாதனைகளை படைக்கு ஊக்கம் தருவதாக இருக்கிறது. எதிர்காலத்தில் நான் டாக்டருக்கு படித்து நரம்பியல் நிபுணராகி சேவை செய்ய விரும்புகிறேன்” என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து மாணவியின் தந்தை நடராஜன் கூறும்போது, நான் கனவில் கூட இதை எதிர்பார்க்கவில்லை. நாட்டின் பிரதமர் எனது மகளை பாராட்டி இருப்பது எங்கள் குடும்பத்திற்கு மட்டும் இன்றி, நாமக்கல் மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது என்றார்.