3 காவலர்களுக்கு கொரோனா : நாமக்கல் மாவட்ட எஸ்.பி.அலுவலகம் மூடல்!
Aug 1, 2020, 11:05 IST1596260120000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 99,794 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பளர் அலுவலகத்தின் தனிப்பிரிவில் பணியாற்றி வரும் போலீசாருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.