3 காவலர்களுக்கு கொரோனா : நாமக்கல் மாவட்ட எஸ்.பி.அலுவலகம் மூடல்!

 

3 காவலர்களுக்கு கொரோனா : நாமக்கல் மாவட்ட எஸ்.பி.அலுவலகம் மூடல்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.

3 காவலர்களுக்கு கொரோனா : நாமக்கல் மாவட்ட எஸ்.பி.அலுவலகம் மூடல்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 99,794 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

3 காவலர்களுக்கு கொரோனா : நாமக்கல் மாவட்ட எஸ்.பி.அலுவலகம் மூடல்!

இந்நிலையில் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பளர் அலுவலகத்தின் தனிப்பிரிவில் பணியாற்றி வரும் போலீசாருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.