ஆம்பூரில் நாம் தமிழர் கட்சியினர் 20 பேர் கைது
Sep 15, 2020, 22:40 IST1600189811000
ஆம்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நாம் தமிழர் கட்சியினர்.
ஊரடங்கு உத்தரவு தடையை மீறி, அனுமதியின்றி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.